Politics
ஆளுநரை எடுபிடியாக வைத்து ஆட்சி செய்வது பெருமையா? - ஒன்றிய அரசை கடுமையாக சாடிய CPIM பாலகிருஷ்ணன்!
ஒன்றிய அரசின் எடுபிடியாக ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் ஒரு கையால் போன்றுதான் இருக்கிறார். இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என கேள்வி எழுகிறது. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கிற திட்டங்களைதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர ஆளுநர் என்ற ஒன்றிய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என்பதுதான் எங்களுடைய அடிப்படையான கருத்து.” என கடுமையாக சாடியுள்ளார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!