Politics
ஆளுநரை எடுபிடியாக வைத்து ஆட்சி செய்வது பெருமையா? - ஒன்றிய அரசை கடுமையாக சாடிய CPIM பாலகிருஷ்ணன்!
ஒன்றிய அரசின் எடுபிடியாக ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் ஒரு கையால் போன்றுதான் இருக்கிறார். இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என கேள்வி எழுகிறது. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கிற திட்டங்களைதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர ஆளுநர் என்ற ஒன்றிய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என்பதுதான் எங்களுடைய அடிப்படையான கருத்து.” என கடுமையாக சாடியுள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!