Politics
"தி.மு.க கூட்டணி, வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெறும்” - வேல்முருகன் உறுதி!
தி.மு.க கூட்டணிக்கு தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டிடுகிறார்.
பண்ருட்டியில், வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் களம் காண இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “பண்ருட்டி தொகுதியில் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, என்னாலான பணிகளைத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்வேன். ஏற்கெனவே பண்ருட்டி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்து மக்களுக்காகப் பாடுபட்டுள்ளேன்.
அ.தி.மு.க கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி பலம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க மாநிலம் முழுவதும் தொகுதிகள்தோறும் 5 அல்லது 6 ஆயிரம் வாக்குகளைப் பெறும்.
அந்த ஓட்டுகள் அனைத்தும் உடைகின்றபோது தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வெற்றியாக இது அமையும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?
-
முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!