Politics
"தி.மு.க கூட்டணி, வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெறும்” - வேல்முருகன் உறுதி!
தி.மு.க கூட்டணிக்கு தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டிடுகிறார்.
பண்ருட்டியில், வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் களம் காண இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “பண்ருட்டி தொகுதியில் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, என்னாலான பணிகளைத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்வேன். ஏற்கெனவே பண்ருட்டி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்து மக்களுக்காகப் பாடுபட்டுள்ளேன்.
அ.தி.மு.க கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி பலம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க மாநிலம் முழுவதும் தொகுதிகள்தோறும் 5 அல்லது 6 ஆயிரம் வாக்குகளைப் பெறும்.
அந்த ஓட்டுகள் அனைத்தும் உடைகின்றபோது தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வெற்றியாக இது அமையும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!