Politics
"தி.மு.க கூட்டணி, வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெறும்” - வேல்முருகன் உறுதி!
தி.மு.க கூட்டணிக்கு தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டிடுகிறார்.
பண்ருட்டியில், வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் களம் காண இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “பண்ருட்டி தொகுதியில் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, என்னாலான பணிகளைத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்வேன். ஏற்கெனவே பண்ருட்டி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்து மக்களுக்காகப் பாடுபட்டுள்ளேன்.
அ.தி.மு.க கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி பலம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க மாநிலம் முழுவதும் தொகுதிகள்தோறும் 5 அல்லது 6 ஆயிரம் வாக்குகளைப் பெறும்.
அந்த ஓட்டுகள் அனைத்தும் உடைகின்றபோது தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வெற்றியாக இது அமையும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!
-
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : “இதுதான் நமது அடுத்த Target” - முதலமைச்சர் பேசியது என்ன?
-
5 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மையில் புரட்சி… திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்!
-
200 மகளிர் தங்கும் வகையில் ரூ.21.02 கோடியில் 4 தோழி விடுதிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!