Politics
"நாங்கள் கல்லெடுத்தும் எறிவோம்” - வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய அ.தி.மு.க அமைச்சர்!
“அ.தி.மு.க-காரர்கள் கல்லெடுத்தும் எறிவோம்” என வன்முறையை ஊக்குவிக்கும் விதமாகப் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சுந்தரபாண்டியம் பகுதியில் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வன்முறையை ஊக்குவிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “அ.தி.மு.க.,வினர் காந்தி கையைப் பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர்., கையைப் பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம்.
அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது; அ.தி.முக.காரர்கள். அ.தி.மு.க காரன் விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்தும் எறிவான்.” எனப் பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியோர் மீது தாக்குதல் நடத்தி டெல்லியையே வன்முறைக் களமாக்கி இருக்கிறார்கள் பா.ஜ.கவின் ஆதரவில் செயல்படும் இந்துத்வா சக்திகள்.
அதுபோல, தமிழகத்திலும் மதக் கலவரங்களை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க தலைவர்கள் கருத்துக் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடைபெற்று வரும் அமைதிப் போராட்டங்களை கலவரமாக்குவதே அவர்களது எண்ணம்.
பா.ஜ.க-வின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க-வினர் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்து, பெரும் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தற்போது கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் பேசி வருவது மக்களைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!