Politics
"எம்.ஜி.ஆரால் தான் அண்ணாவே நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்" - ராஜேந்திர பாலாஜி பேச்சால் சர்ச்சை!
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "எம்.ஜி.ஆர் அருகில் இருந்ததால்தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார். எம்.ஜி.ஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கு மக்கள் ஓட்டு போட்டனர்.
இதுதான் உண்மை. கலைஞர் முதலமைச்சராக காரணமும் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள் அவரைப் போல் வாழவேண்டும் என நினைத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது" எனக் கூறினார்.
எம்.ஜி.ஆர் அருகில் இருந்ததால் தான் பேரறிஞர் அண்ணா மக்களால் அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புகளில் இருந்த மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுமைப் படுத்தியுள்ளதாக அக்கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, தங்கள் தலைவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டவரும், தங்கள் கட்சியின் பெயரிலேயே இருப்பவருமான பேரறிஞர் அண்ணாவையே சிறுமைப் படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது : துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!