Politics
“தமிழக தேர்தல் ஆணையம் குழப்பமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி , “எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க தொடுத்த வழக்கில் முழுமையாக எங்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதனடிப்படையில் நாங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம்.
அதேபோல தமிழக தேர்தல் ஆணையம் குழப்பமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் நிர்பயா, கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவங்களில் அரசு தலையீடு இல்லை; ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் அ.தி.மு.க.வின் நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டதால் போலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!