Politics
"உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது குறித்து முடிவு” - மு.க.ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தலைவர்கள்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் ஆகியோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
தமிழகத்தை ஆளக்கூடிய அரசு உண்மையிலேயே தேர்தல் நடத்தினால் தி.மு.க அமோக வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
நாளை பாராளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தை பாரதிய ஜனதா கூட்டியுள்ளது. நடைபெற உள்ள பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் நீங்களும் பங்குபெற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார். அவரது கருத்து எங்கள் கட்சி தலைவர்களிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!