Politics
‘மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்’ : பா.ஜ.க.வுக்கு ‘டாட்டா’ காட்டும் சிவசேனா!- பின்னணி என்ன?
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., – சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தது.
இருப்பினும் இரு கட்சிகளிடையே 50;50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டு காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் தாக்ரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை , அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர்.
இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே சரத்பவார் எதிர்கட்சி வரிசையில் அமருவோம் என தெளிவுபட அறிவித்திருந்த நிலையில் தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அரசியலில் எதிரும் புதிருமான விளங்கி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனாவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், சிவசேனா ஏன் பா.ஜ.க.,வை விட்டு விலக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைக்க பா.ஜ.க முயற்சி செய்ததாகவும், அதன்காரணமாகத் தான் சிவசேனா ஆட்சி அமைக்க முந்திக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான முடிவுகளை எட்டும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலையை நாடே உற்றுநோக்கி வருகிறது.
Also Read
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!