Politics
“காழ்ப்புணர்ச்சியால் பேசும் ராமதாஸுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை” - கனிமொழி எம்.பி பதிலடி!
செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இன்று காலை தாயகம் திரும்பினார் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி.
சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு தி.மு.க மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில், பெண்களை நாடாளுமன்ற அமைப்பிற்கு கொண்டு வருவது, சுகாதார பிரச்னைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் பேசுவது அநாகரிகமான செயல் என கருத்து கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமில்லாமல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார் என்றார்.
மேலும், “தலைவர் கலைஞரின் உழைப்பால் உருவானதுதான் முரசொலி அலுவலகம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல ஆதாரமிருந்தால் நிரூபித்துவிட்டு ராமதாஸ் பேசட்டும்.
முரசொலி எப்படி, எவ்வாறு உருவாக்கப்பட்டது என தலைவர் கலைஞரின் உழைப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் ராமதாஸ் பேச்சுக்கெல்லாம் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை” என கனிமொழி கூறியுள்ளார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !