Politics
“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளிக்காத எஸ்.பியை இடமாற்றம் செய்க” - சர்வாதிகாரத்தின் உச்சத்தில் பா.ஜ.க!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியதற்கு மாவட்ட எஸ்.பி செல்வராஜ் மறுத்துள்ளார். இதனையடுத்து அவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ராமநாதபுரம் மண்டல பா.ஜ.க இளைஞரணி பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராமநாதபுரம் மண்டல பா.ஜ.க இளைஞரணி பொறுப்பாளர் டி.எஸ். பாண்டியராஜ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜிடம் அனுமதி கோரியிருந்தோம்.
ஆனால் கடைசி நேரம் வரை பேரணி நடத்த மாவட்ட எஸ்.பி அனுமதியளிக்க மறுத்துள்ளார். அரசியல் நோக்கத்துடன் பேரணி நடத்த செல்வராஜ் அனுமதி அளிக்கவில்லை. ஆகவே செல்வராஜை வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யவேண்டும்” என பாண்டியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேரணிக்கு அனுமதி தராததற்காக ஒரு காவல்துறை உயரதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என தன் தலைமையிடம் பா.ஜ.க இளைஞரணி பொறுப்பாளர் கோரியிருப்பது சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
தங்களுக்கு ஏதுவாகச் செல்லவில்லை என்றால் அதிகார துஷ்பிரயோகம் செய்வோம் என் சொல்லாமல் சொல்லும் வகையிலேயே இந்த கடிதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர் எவ்வித மத பாகுபாடுகளும் இல்லாமல் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி. இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தவேண்டும் என பா.ஜ.கவினர் துடிப்பது மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்து விடுமோ என்ற எண்ணத்தில் மாவட்ட எஸ்.பி அனுமதி மறுத்திருப்பார் என கூறப்படுகிறது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!