Politics
அ.தி.மு.க கொடியில் மோடியின் படத்தை போட்டுக்கொள்ளலாம் - ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகளை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அ.தி.மு.க, அக்கட்சியின் கொடியில் உள்ள அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம்.
தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிப்பது நாட்டின் பன்முக தன்மையை கெடுத்துவிடும், மத்திய அரசு இந்தி திணிப்பதை தவிர்க்க வேண்டும் .
அவ்வாறு செய்யவில்லை எனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!