Politics
அ.தி.மு.க கொடியில் மோடியின் படத்தை போட்டுக்கொள்ளலாம் - ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகளை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அ.தி.மு.க, அக்கட்சியின் கொடியில் உள்ள அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம்.
தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிப்பது நாட்டின் பன்முக தன்மையை கெடுத்துவிடும், மத்திய அரசு இந்தி திணிப்பதை தவிர்க்க வேண்டும் .
அவ்வாறு செய்யவில்லை எனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !