Politics
“வைகோவை இந்த தண்டனை பாதிக்காது; அவர் வெற்றி பெறுவார்” - ஈஸ்வரன் பேட்டி
1972-ம் ஆண்டு மின்சார கட்டன உயர்வைக் கண்டித்து அய்யம்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவஞ்சலி கூட்டம் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றிருந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவுக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை அவரை பாதிக்காது. மேல்முறையீடு செய்து அவர் வென்றுவிடுவார் எனப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, கிடப்பில் போடப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலே போதும் என்றார். மேலும், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளின் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தாமல் இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
இதுவே மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது எனவும் கிண்டலாகத் தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.
Also Read
-
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?