Politics
ராகுல் காந்தி ராஜினாமாவை அடுத்து அடுத்த வாரம் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி?
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. மேலும், காங்கிரஸ் தலைவராக தான் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!