Politics
ராகுல் காந்தி ராஜினாமாவை அடுத்து அடுத்த வாரம் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி?
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. மேலும், காங்கிரஸ் தலைவராக தான் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!