Politics
ராகுல் காந்தி ராஜினாமாவை அடுத்து அடுத்த வாரம் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி?
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. மேலும், காங்கிரஸ் தலைவராக தான் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!