Politics
ஜனநாயகத்தின் மீது குண்டு வீசி இருக்கிறார் மோடி - கி.வீரமணி பேச்சு
தேசிய கல்விக்கொள்கையின் வரைவு 2019 அறிக்கை தமிழ் பிரதிக்கான நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயா சார்பில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய ஆசிரியர் கி.வீரமணி, “தேசிய கல்விக்கொள்கை என்பது ஜனநாயகத்தின் மீதும், மாநிலங்களின் மீதும் பிரதமர் மோடி வீசியிருக்கும் முதல் குண்டு” எனக் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றி அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் நிலையில் மும்மொழிக் கொள்கை எதற்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முத்தரசனும், பாலகிருஷ்ணனும் இந்தி மொழியை திணிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினர். இதற்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஊதுகுழலாக உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினர்.
Also Read
-
அமைதியை விரும்புவது தமிழ்நாட்டின் D.N.A.. அதைச் சிதைக்க துடிக்கும் NDA - மதுரையில் கர்ஜித்த முதலமைச்சர்!
-
“பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட எண்ணிவிடலாம், துரோகங்களை எண்ண முடியாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மோடிஜி Where Is LPG? என்று கேட்கும் மக்களுக்கு பிரதமரின் பதில் என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
தமிழ் மண்ணில் மும்மொழி கொள்கையை கூறி வாக்கு கேட்க முடியுமா?: தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் சவால்!
-
”கலைஞர் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சு.. கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி” : குவியும் கண்டனங்கள்!