Politics
“மோடி, மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்” : ராகுல் காந்தி சாடல்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மக்களை சந்திப்பதற்காக திறந்த வேனில் வந்த ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களை பிளவுபடுத்தியே, மோடி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை எட்டியுள்ளார் எனச் சாடினார்.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் வெறுப்புணர்வையும், பொய்களையும், விஷத்தன்மையையுமே கொண்டிருந்தது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், மோடியின் பிரிவினைவாதத்துக்கு எதிராக ப்போராட நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, வயநாடு தொகுதி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றமான பொதுவெளியிலும் குரல் கொடுத்துப் பாடுபடுவேன் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!