Politics
“மோடி, மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்” : ராகுல் காந்தி சாடல்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மக்களை சந்திப்பதற்காக திறந்த வேனில் வந்த ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களை பிளவுபடுத்தியே, மோடி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை எட்டியுள்ளார் எனச் சாடினார்.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் வெறுப்புணர்வையும், பொய்களையும், விஷத்தன்மையையுமே கொண்டிருந்தது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், மோடியின் பிரிவினைவாதத்துக்கு எதிராக ப்போராட நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, வயநாடு தொகுதி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றமான பொதுவெளியிலும் குரல் கொடுத்துப் பாடுபடுவேன் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
Also Read
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !