Politics
“மோடி, மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்” : ராகுல் காந்தி சாடல்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மக்களை சந்திப்பதற்காக திறந்த வேனில் வந்த ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களை பிளவுபடுத்தியே, மோடி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை எட்டியுள்ளார் எனச் சாடினார்.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் வெறுப்புணர்வையும், பொய்களையும், விஷத்தன்மையையுமே கொண்டிருந்தது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், மோடியின் பிரிவினைவாதத்துக்கு எதிராக ப்போராட நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, வயநாடு தொகுதி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றமான பொதுவெளியிலும் குரல் கொடுத்துப் பாடுபடுவேன் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!