Politics
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனுமில்லை - மம்தா பானர்ஜி
மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்களை வரையறுப்பதற்காக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நிதி ஆயோக்கின் ஐந்தாண்டு ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் வருகிற ஜூன் 15 அன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி, மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கும் அதிகாரமும், திட்டங்களுக்கு உதவி புரியும் அதிகாரமும் நிதி ஆயோக் அமைப்புக்கு இல்லை எனக் கூறி, எதிர்வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்பதின் மூலம் எந்த பயனும் கிடைக்கபெற போவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
Also Read
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?
-
11 வீரர்களுக்கு பதில் 5 வீரர்கள்: பார்ம் இல்லாத அணியை கொண்டு உலககோப்பைக்கு செல்லும் இந்தியா - ஒரு பார்வை!
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !