Politics
பின்னடைவைச் சந்திக்கிறார் ராகுல் : அமேதியில் வெற்றி பெறுவாரா ?
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைபெற்று முடிந்த 542 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம் வெளியானது முதலே பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
வி.ஐ.பி தொகுதிகளில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் 5101 வாக்கு வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 43,118 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
போபால் தொகுதியில் பிரக்யா தாகுர் காங்கிரஸ் கட்சியின் திக் விஜய சிங்கைவிட 90149 வாக்கு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் 1,64,115வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1,81,316 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா 3,81,482 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
‘point-blank shot..’ - அசாம் முதல்வர் வெளியிட்ட வீடியோவால் இஸ்லாமியர்கள் அச்சம்! - பின்னணி?
-
“பா.ஜ.க. வந்தால் பற்றி எரியும்… மீண்டும் வந்தால் மீண்டும் எரியும்!” - முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!