Politics
பின்னடைவைச் சந்திக்கிறார் ராகுல் : அமேதியில் வெற்றி பெறுவாரா ?
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைபெற்று முடிந்த 542 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம் வெளியானது முதலே பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
வி.ஐ.பி தொகுதிகளில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் 5101 வாக்கு வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 43,118 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
போபால் தொகுதியில் பிரக்யா தாகுர் காங்கிரஸ் கட்சியின் திக் விஜய சிங்கைவிட 90149 வாக்கு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் 1,64,115வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1,81,316 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா 3,81,482 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?