Politics
பின்னடைவைச் சந்திக்கிறார் ராகுல் : அமேதியில் வெற்றி பெறுவாரா ?
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைபெற்று முடிந்த 542 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம் வெளியானது முதலே பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
வி.ஐ.பி தொகுதிகளில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் 5101 வாக்கு வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 43,118 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
போபால் தொகுதியில் பிரக்யா தாகுர் காங்கிரஸ் கட்சியின் திக் விஜய சிங்கைவிட 90149 வாக்கு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் 1,64,115வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1,81,316 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா 3,81,482 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!