Politics
கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வதந்திகள் : பிரியங்கா காந்தி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை வெறும் வதந்திகள். அதனைக் கண்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். இந்த அனைத்து சம்பவங்களின் மத்தியிலும் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு, வெளியே நாம் பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் பணிகளை மேற்க்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவுகள் நிச்சயம் நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று செய்தியை ஆடியோ மூலமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !