Politics
கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வதந்திகள் : பிரியங்கா காந்தி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை வெறும் வதந்திகள். அதனைக் கண்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். இந்த அனைத்து சம்பவங்களின் மத்தியிலும் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு, வெளியே நாம் பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் பணிகளை மேற்க்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவுகள் நிச்சயம் நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று செய்தியை ஆடியோ மூலமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!