Politics
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - முதல்வர் கமல்நாத் தகவல்
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ம.பி.ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
இது குறித்து பேசிய முதல்வர் கமல்நாத், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 5 மாதங்களில் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்து இருப்பதாக கூறினார். மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் அரசு தயாராகவே இருக்கிறது என்றும் கமல்நாத் தெரிவித்தார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!