Politics
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - முதல்வர் கமல்நாத் தகவல்
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ம.பி.ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
இது குறித்து பேசிய முதல்வர் கமல்நாத், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 5 மாதங்களில் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்து இருப்பதாக கூறினார். மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் அரசு தயாராகவே இருக்கிறது என்றும் கமல்நாத் தெரிவித்தார்.
Also Read
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !