Politics
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - முதல்வர் கமல்நாத் தகவல்
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ம.பி.ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
இது குறித்து பேசிய முதல்வர் கமல்நாத், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 5 மாதங்களில் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்து இருப்பதாக கூறினார். மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் அரசு தயாராகவே இருக்கிறது என்றும் கமல்நாத் தெரிவித்தார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!