Politics
ராகுல் காந்தி -சீதாராம் எச்சூரி சந்திப்பு: ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வரும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தார். பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்தார். அதைத் தொடர்ந்து மாலை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் இடையே பேசிய சந்திரபாபு நாயுடு”, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, பா.ஜ.கவை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும் வரலாம். தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்றார். இதன் மூலம் பா.ஜ.க கூட்டணியில் இல்லாத கட்சிகளை இணைத்துக் கொள்வதிலும் மும்முரம் காட்டப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரியை சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. இதன் தொடர்ச்சியாக மாலை சீதாராம் எச்சூரி - ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ந்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகளை பொருத்து ஆட்சி அமைப்பது பற்றி உடனடியாக முடிவெடுக்க, எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !