Politics
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதல்வர்!
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ், இன்று சென்னை ஆழ்வார்பேட்டியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேர்தலுக்கு முன்பே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
இந்தச் சந்திப்பின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் முடிவில் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுச் சிலையை சந்திரசேகர் ராவுக்கு பரிசாக வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் முக்கியத் தலைவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தி.மு.க சார்பில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவிடம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய துணைபுரிய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தச் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!