Politics
“திமுக வெற்றி பெற்றதும் 25 அல்ல; 10 நாட்களிலேயே ஆட்சியை மாற்றுவோம்” - துரைமுருகன் சவால்!
மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் 18 ம் தேதி நடந்து முடிந்துள்ளது. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் மே 19 நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது : இந்த கூட்டத்திற்கு அதிக அளவில் பெண்கள் கலந்துக்கொண்டுள்ளதை பார்க்கும்போது தி.மு.க வெற்றி உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி அவர்களிடம் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால் தான் அவரை தி.மு.க-விற்கு அழைத்து வந்து விட்டோம். கருணாநிதி ஆட்சியின்போது இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார். அதனை எதிர்த்து தி.மு.க போராடி மீண்டும் அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம்.
துரைமுருகன் ஒரு தனிப்பட்ட சத்தி அல்ல. தி.மு.க-வின் பொருளாளர், சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர். ஏன் பல தேர்தல்களைச் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நடைபெற்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் 25 நாளில் இந்த ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்றேன். அப்படி கூறியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!