Politics
இந்திய விமானப்படை விமானத்தை டாக்ஸி போல பயன்படுத்திகிறார் மோடி - காங்கிரஸ் குற்றசாட்டு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
தேர்தல் பிரச்சாரங்களுக்காக இந்திய விமானப்படையின் ஜெட் விமானத்தை மோடி பயன்படுத்தியதும், அதற்கு வெறும் 744 ரூபாய் மட்டுமே வாடகையாக கொடுத்ததும் அம்பலமாகி உள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் டாக்ஸியை போல இந்திய விமானப்படை விமானத்தை மோடி பயன்படுத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது என்று தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக ஊடகமொன்றில் இன்று, இதுபற்றிய செய்தி வெளியாகி இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை அவர், சொந்த பயன்பாடுகளுக்காக, பயன்படுத்திய, இந்திய விமானப்படை, விமான சேவைகளுக்கு, பாஜக சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 240 அலுவலக ரீதியில் அல்லாத, உள்நாட்டு பயணங்களுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. சில பயணங்களுக்கு மிகக் குறைவாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மோடி பயன்படுத்திய விமான படை விமானத்திற்கான கட்டணமாக பாஜக 744 ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
Also Read
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!