Politics
போபால் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
போபால் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரச்சாரம் செய்ய 72 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள போதிலும் கூட்டங்களில் பேசியது ஏன் என விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!