Politics
பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை : இரா.முத்தரசன் வலியுறுத்தல்!
மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
“நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் அதிகாரி நுழைந்துள்ளார். அவர் யார் சொல்படி அந்தப் பணியை மேற்கொண்டார் என்பதை விசாரிக்க வேண்டும். அதை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். பெண் அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !