Politics
பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை : இரா.முத்தரசன் வலியுறுத்தல்!
மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
“நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் அதிகாரி நுழைந்துள்ளார். அவர் யார் சொல்படி அந்தப் பணியை மேற்கொண்டார் என்பதை விசாரிக்க வேண்டும். அதை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். பெண் அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!