Politics
சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு !
மதுரை தொகுதியில் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் N.R.இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.
இது தொடர்பாக முறையான விசாரணை நடைப்பெறவில்லை என்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!