Politics
இன்றுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம்
18ம் தேதி நடக்கவுள்ள 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், 25 நாட்களாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார். இந்நிலையில், அவர் திருவாரூரிலேயே தனது தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 11ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது, ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றன. அதனால், 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!