Politics
எனக்கு வாக்களிக்கவில்லை என்றால்... முஸ்லிம்களை மிரட்டிய மேனகா காந்தி
முஸ்லிம் மக்களை மிரட்டும் விதமாக பேசி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மேனகா காந்தி. அந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் டூரப் காணி கிராமத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ” முஸ்லிம்கள் வாக்கு இல்லாமலும் நான் வெற்றி பெறுவேன். அப்படி முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், பின் என்னிடம் எந்தவித வேலைகளையும் செய்துதர வேண்டி எதிர்பார்க்கக் கூடாது. முஸ்லிம் வாக்காளர்கள், இதனை புரிந்துகொள்ள வேண்டும். இது கொடுக்கல் வாங்கல் விவகாரம் போன்றது. நாம் என்ன காந்தியின் குழந்தைகளா? நீங்கள் வாக்களிகாமல் நான் மட்டும் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கு?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேனகா காந்தியின் இந்த பேச்சு முஸ்லிம் மக்களை நாட்டை விட்டே வெளியேற்றும் பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கையின் வெளிப்பாடே, என காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!