murasoli thalayangam
“சனாதனம் இருக்கும் வரை பெரியாரின் கொள்கையும் ஒலிக்கும்” - முரசொலி தலையங்கம்
“பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பெரியார் தமது பரப்புரையின் இறுதியில், ‘நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. நான் சொல்வதைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.
பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவரின் கொள்கைகளோ அல்லது அவரது பணிகளோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.
1971 தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்னையைக் கிளப்பினார்கள். இப்போது இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பியிருக்கின்றனர். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது.
பெரியாரும் அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை. ஏனெனில், சனாதனம் இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே, பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார். வாழ்வார். முரசொலியும் ஒலித்துக்கொண்டே இருக்கும்”என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!