murasoli thalayangam
“பிரச்னைகளை திசைதிருப்பி, சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவே குடியுரிமை சட்டம்” - முரசொலி தலையங்கம்
“இந்தியாவை ஆளும் அரசுக்கு ஓராயிரம் சிக்கல்கள் இருக்கின்றன. வாய்க்கு வந்தபடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் பொருளாதாரம் தரைதட்டி நிற்கிறது. அவர்கள் பொருளாதாரம் பற்றிப் பேச மறுப்பதே பொருளாதாரம் இருக்கும் லட்சணத்தை உணர்த்தும்.
370-வது சட்டத்தை நீக்கிவிட்டால் காஷ்மீர் அமைதியாகிவிய்டும் என்றார்கள். ஒரு மாநிலமே பல மாதங்களாக சிறைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது. அமைதி என்பதற்கு அர்த்தம் மயான அமைதி போலும்!
ஆட்சியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்ப குடியுரிமைச் சட்டத்தை கையிலெடுத்து நிறைவேற்றியிருக்கிறார்கள். இச்சட்டத்தை அறிமுக நிலையிலேயே எதிர்த்தது தி.மு.க. எல்லா மதத்தவரும் வரலாம் என்றால் இஸ்லாமியர் விடுபட்டது ஏன்? எல்லா நாட்டவரும் வரலாம் என்றால் இலங்கை விடுபட்டது ஏன்? என்பதுதான் தி.மு.க-வின் கேள்வி.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமும், டெல்லியும், மேற்கு வங்கமும் அனலாகத் தகிக்கிறது. அதலபாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரம் குறித்த பேச்சுகளை திசைதிருப்பவே இதுபோன்ற தந்திரங்களை பா.ஜ.க கையாள்கிறது” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!