murasoli thalayangam
“பிரச்னைகளை திசைதிருப்பி, சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவே குடியுரிமை சட்டம்” - முரசொலி தலையங்கம்
“இந்தியாவை ஆளும் அரசுக்கு ஓராயிரம் சிக்கல்கள் இருக்கின்றன. வாய்க்கு வந்தபடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் பொருளாதாரம் தரைதட்டி நிற்கிறது. அவர்கள் பொருளாதாரம் பற்றிப் பேச மறுப்பதே பொருளாதாரம் இருக்கும் லட்சணத்தை உணர்த்தும்.
370-வது சட்டத்தை நீக்கிவிட்டால் காஷ்மீர் அமைதியாகிவிய்டும் என்றார்கள். ஒரு மாநிலமே பல மாதங்களாக சிறைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது. அமைதி என்பதற்கு அர்த்தம் மயான அமைதி போலும்!
ஆட்சியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்ப குடியுரிமைச் சட்டத்தை கையிலெடுத்து நிறைவேற்றியிருக்கிறார்கள். இச்சட்டத்தை அறிமுக நிலையிலேயே எதிர்த்தது தி.மு.க. எல்லா மதத்தவரும் வரலாம் என்றால் இஸ்லாமியர் விடுபட்டது ஏன்? எல்லா நாட்டவரும் வரலாம் என்றால் இலங்கை விடுபட்டது ஏன்? என்பதுதான் தி.மு.க-வின் கேள்வி.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமும், டெல்லியும், மேற்கு வங்கமும் அனலாகத் தகிக்கிறது. அதலபாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரம் குறித்த பேச்சுகளை திசைதிருப்பவே இதுபோன்ற தந்திரங்களை பா.ஜ.க கையாள்கிறது” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !