murasoli thalayangam

கவிழப்போகும் கொத்தடிமைகள் ஆட்சி! - முரசொலி தலையங்கம் 

ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வின் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வந்தார் என்று இதுவரை எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியபோது மறுத்தவர்கள், இன்று குருமூர்த்தி அந்த உண்மையை போட்டு உடைத்ததும் பதில் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.

கூவத்தூரில் நடந்த கூவ அரசியலை தூண்டிவிட்டு பழனிச்சாமியை ஆட்சியில் அமர்த்திய குருமூர்த்தி வகையறாக்கள், இன்று அ.தி.மு.க கொத்தடிமைகளின் கையாளாகாத்தனத்தை கண்டு குறுக்குப் பாதைக்கு யாரேனும் வழிகாட்ட மாட்டார்களா என தேடித் திரிகிறார்கள்.

இது எடப்பாடி கும்பலின் பதவிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த செயல்களுக்குப் பின்னே இருப்பது அரசியலுமல்ல,ராஜதந்திரமுமல்ல; கயமைத்தனம் மட்டுமே என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.