murasoli thalayangam
மனசாட்சி இல்லாமல் ‘கூட்டாட்சியின் ஆன்மா’ பற்றி பேசும் மோடி! - முரசொலி தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது சிறப்புக் கூட்டத்தில் பெருமித உரையாற்றினார். அதில் ‘கூட்டாட்சி அமைப்பின் ஆன்மா மாநிலங்களவை’ என்று கூறியிருக்கிறார். பொழுது விடிந்தால் பா.ஜ.க அரசு இன்று என்ன சொல்லப்போகிறதோ, செய்யப் போகிறதோ என்கிற அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்திருக்கும் பா.ஜ.க பிரதமர்தான் கூட்டாட்சியைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
உண்மையச் சொன்னால் நம் நாட்டில் நடப்பது கூட்டாட்சியுமில்லை, ஒற்றையாட்சியுமில்லை. இரண்டும் உள்ள புதிய கலவையாக செயல்பாட்டில் இருப்பதால்தான் பல குழப்பங்கள் நாட்டில் மலிந்து காணப்படுகின்றன என முரசொலி கூறியுள்ளது.
கூட்டாட்சியின் ஆன்மா உண்மையிலேயே மாநிலங்களவையில் இருக்குமானால் காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டிருக்குமா? அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டதுதான் கூட்டாட்சியின் மாண்பா? பா.ஜ.க பிரதமர் மோடி கூறியிருக்கும் கூட்டாட்சியின் ‘ஆன்மா’வை நாம் பேரண்டத்தில் தேட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !