murasoli thalayangam
‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தை பஞ்சர் ஆக்கும் அ.தி.மு.க!- முரசொலி தலையங்கம்
”அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்பதுதான் ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தின் நோக்கமாக இருந்தது. அந்த சட்டத்தின் நோக்கத்தையே பஞ்சராக்கத் துணிந்துவிட்டது எடப்பாடி அரசு.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்ற அவசரச் சட்டத்தை அ.தி.மு.க அரசு கொடுத்ததும், அன்றைய தினமே கையெழுத்திட்டுவிட்டார் ஆளுநர் பன்வாரிலால். ஆனால் 2018-ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானமாக அனுப்பிய 7-பேர் விடுதலை இன்னும் அப்படியே கிடக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து 2 முறை சட்டசபைத் தீர்மானம் போட்டு அனுப்பினோம், இரண்டு தீர்மானங்களையும் திருப்பி அனுப்பினார்கள். அதை மீண்டும் அமைச்சரவை, சட்டசபை தீர்மானம் போட்டு அனுப்ப எடப்பாடி அரசு முயற்சிக்கவில்லை.
எடப்பாடி அரசுக்கு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது. அதேபோல் ஆளுநருக்கு எதில் முதலில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்பதும் நன்கு தெரிந்துள்ளது. மக்களுக்கும் தெரியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடப்பாடி அரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று” - முரசொலி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!