murasoli thalayangam
அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமைத்ததற்கு காரணம் இதுதான்! - முரசொலி தலையங்கம்
மகாராஷ்டிரா அரசியல் நிலைமைகளைப் பார்த்து மாட்சிமை தாங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு உபதேசம் செய்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பா.ஜ.க-வின் கடந்தகால வரலாற்றை மறந்துவிட்டார் என்றே தெரிகிறது. மாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளின் கூட்டணியில் இருந்துவிட்டால் நாடு முழுவதும் காவிக்கு சொந்தமாகிவிட்டது என்ற நினைப்பு பா.ஜ.க-விற்கு.
கர்நாடகாவில்தான் கழுத்தறுப்பை சமீபத்தில் பார்த்தோம். எதிரணியுடன் சேர்ந்து சிவசேனா பா.ஜ.க-வின் செல்வாக்கை சரியச்செய்ததையும் பார்த்தோம். திருவள்ளுவருக்கு காவி வேட்டியைக் கட்டிவிட்டது போல செல்வாக்கான சக்திகளோடு சேர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பின்வாசல் வழியே மாநிலங்களை பிடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க அமைச்சர் அமித்ஷாதான் பெரும்பான்மை இருந்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள் என உபதேசம் கூறுகிறார். இந்த உபதேசத்தின்படி முதலில் நீங்கள் நடக்கப் பாருங்கள், பிறகு அடுத்தவர்களுக்குச் சொல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!