murasoli thalayangam
அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமைத்ததற்கு காரணம் இதுதான்! - முரசொலி தலையங்கம்
மகாராஷ்டிரா அரசியல் நிலைமைகளைப் பார்த்து மாட்சிமை தாங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு உபதேசம் செய்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பா.ஜ.க-வின் கடந்தகால வரலாற்றை மறந்துவிட்டார் என்றே தெரிகிறது. மாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளின் கூட்டணியில் இருந்துவிட்டால் நாடு முழுவதும் காவிக்கு சொந்தமாகிவிட்டது என்ற நினைப்பு பா.ஜ.க-விற்கு.
கர்நாடகாவில்தான் கழுத்தறுப்பை சமீபத்தில் பார்த்தோம். எதிரணியுடன் சேர்ந்து சிவசேனா பா.ஜ.க-வின் செல்வாக்கை சரியச்செய்ததையும் பார்த்தோம். திருவள்ளுவருக்கு காவி வேட்டியைக் கட்டிவிட்டது போல செல்வாக்கான சக்திகளோடு சேர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பின்வாசல் வழியே மாநிலங்களை பிடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க அமைச்சர் அமித்ஷாதான் பெரும்பான்மை இருந்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள் என உபதேசம் கூறுகிறார். இந்த உபதேசத்தின்படி முதலில் நீங்கள் நடக்கப் பாருங்கள், பிறகு அடுத்தவர்களுக்குச் சொல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!