murasoli thalayangam
அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமைத்ததற்கு காரணம் இதுதான்! - முரசொலி தலையங்கம்
மகாராஷ்டிரா அரசியல் நிலைமைகளைப் பார்த்து மாட்சிமை தாங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு உபதேசம் செய்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பா.ஜ.க-வின் கடந்தகால வரலாற்றை மறந்துவிட்டார் என்றே தெரிகிறது. மாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளின் கூட்டணியில் இருந்துவிட்டால் நாடு முழுவதும் காவிக்கு சொந்தமாகிவிட்டது என்ற நினைப்பு பா.ஜ.க-விற்கு.
கர்நாடகாவில்தான் கழுத்தறுப்பை சமீபத்தில் பார்த்தோம். எதிரணியுடன் சேர்ந்து சிவசேனா பா.ஜ.க-வின் செல்வாக்கை சரியச்செய்ததையும் பார்த்தோம். திருவள்ளுவருக்கு காவி வேட்டியைக் கட்டிவிட்டது போல செல்வாக்கான சக்திகளோடு சேர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பின்வாசல் வழியே மாநிலங்களை பிடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க அமைச்சர் அமித்ஷாதான் பெரும்பான்மை இருந்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள் என உபதேசம் கூறுகிறார். இந்த உபதேசத்தின்படி முதலில் நீங்கள் நடக்கப் பாருங்கள், பிறகு அடுத்தவர்களுக்குச் சொல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!