murasoli thalayangam
அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமைத்ததற்கு காரணம் இதுதான்! - முரசொலி தலையங்கம்
மகாராஷ்டிரா அரசியல் நிலைமைகளைப் பார்த்து மாட்சிமை தாங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு உபதேசம் செய்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பா.ஜ.க-வின் கடந்தகால வரலாற்றை மறந்துவிட்டார் என்றே தெரிகிறது. மாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளின் கூட்டணியில் இருந்துவிட்டால் நாடு முழுவதும் காவிக்கு சொந்தமாகிவிட்டது என்ற நினைப்பு பா.ஜ.க-விற்கு.
கர்நாடகாவில்தான் கழுத்தறுப்பை சமீபத்தில் பார்த்தோம். எதிரணியுடன் சேர்ந்து சிவசேனா பா.ஜ.க-வின் செல்வாக்கை சரியச்செய்ததையும் பார்த்தோம். திருவள்ளுவருக்கு காவி வேட்டியைக் கட்டிவிட்டது போல செல்வாக்கான சக்திகளோடு சேர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பின்வாசல் வழியே மாநிலங்களை பிடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க அமைச்சர் அமித்ஷாதான் பெரும்பான்மை இருந்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள் என உபதேசம் கூறுகிறார். இந்த உபதேசத்தின்படி முதலில் நீங்கள் நடக்கப் பாருங்கள், பிறகு அடுத்தவர்களுக்குச் சொல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!