murasoli thalayangam
வடக்கை அதிரச் செய்த தெற்கே விழுந்த இடி! - முரசொலி தலையங்கம்
ஒரே நாடு ஒரே மொழி என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட அமித்ஷா 4 நாட்களில் திரும்பப் பெற்றுள்ளார் என்றால், இடையில் என்ன நடந்தது?
ஜனநாயகத்திற்கும், பழம்பெரும் பன்முகத்தன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் அமித்ஷாவின் வார்த்தையைக் கேட்ட மறு நொடி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்கிறார், போரட்டத்தை அறிவிக்கிறார். ஆளுநர் மு.க.ஸ்டாலினை அழைத்துப் பேசுகிறார், பா.ஜ.க தரப்பின் விளக்கம் தி.மு.க தலைவருக்கு சொல்லப்படுகிறது.
அடுத்த நிமிடங்களில் அமித்ஷா தனது கருத்திலிருந்து பின்வாங்குகிறார் என்றால் இந்தி திணிப்பை தடுக்கும் வல்லமை தி.மு.கழகத்திற்கு, திராவிட இயக்கத்திற்கே உண்டு என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
அன்று ஜனநாயகம் பேசிய நேருவை பணிய வைப்பது கூட பெரிதல்ல, நித்தமும் சர்வாதிகார, எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பா.ஜ.க-வையே பணிய வைத்ததில் தான் தி.மு.க-வின் பலமும் மு.க.ஸ்டாலினின் கம்பீரமும் அடங்கியிருக்கிறது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?