murasoli thalayangam
வடக்கை அதிரச் செய்த தெற்கே விழுந்த இடி! - முரசொலி தலையங்கம்
ஒரே நாடு ஒரே மொழி என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட அமித்ஷா 4 நாட்களில் திரும்பப் பெற்றுள்ளார் என்றால், இடையில் என்ன நடந்தது?
ஜனநாயகத்திற்கும், பழம்பெரும் பன்முகத்தன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் அமித்ஷாவின் வார்த்தையைக் கேட்ட மறு நொடி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்கிறார், போரட்டத்தை அறிவிக்கிறார். ஆளுநர் மு.க.ஸ்டாலினை அழைத்துப் பேசுகிறார், பா.ஜ.க தரப்பின் விளக்கம் தி.மு.க தலைவருக்கு சொல்லப்படுகிறது.
அடுத்த நிமிடங்களில் அமித்ஷா தனது கருத்திலிருந்து பின்வாங்குகிறார் என்றால் இந்தி திணிப்பை தடுக்கும் வல்லமை தி.மு.கழகத்திற்கு, திராவிட இயக்கத்திற்கே உண்டு என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
அன்று ஜனநாயகம் பேசிய நேருவை பணிய வைப்பது கூட பெரிதல்ல, நித்தமும் சர்வாதிகார, எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பா.ஜ.க-வையே பணிய வைத்ததில் தான் தி.மு.க-வின் பலமும் மு.க.ஸ்டாலினின் கம்பீரமும் அடங்கியிருக்கிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!