murasoli thalayangam

சமூகநீதிக்கு ஏற்படும் பாதகங்களை ஓயாது தடுக்கும் திராவிடக் குரல்! - முரசொலி தலையங்கம்

சமூகநீதி தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கிறது. எந்தத் தத்துவத்திற்காக இயக்கம் தோன்றியதோ, அந்த தத்துவத்திற்கு பா.ஜ.க அரசால் பாதகம் வரும்போது அதை தடுக்கும் அரணாக திராவிட இயக்கம் இயங்கி வருகிறது. அதற்கு அடையாளம் தான் தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய குரல் என முரசொலி நாளேடு கூறியுள்ளது.