M K Stalin

”தயக்கமின்றி 15-18 வயதுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துங்கள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை #COVID19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்! நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “ஒமைக்ரானில் இருந்து நம்மை காக்கும் கேடயம் முகக்கவசம் தான்” : மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர்!