M K Stalin
தமிழக அமைச்சர்கள் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள் - மு.க ஸ்டாலின்
சுதந்திர போராட்ட மன்னர் பூலித்தேவரின் 304வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி , கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அ.தி.மு.க ஆட்சியில் ஏற்கனவே இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதில் 5.5 லட்சம் கோடி ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்து இருந்தோம். ஆனால், இதுவரை பதில் இல்லை.
இந்நிலையில் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் பொழுதுபோக்கிற்காகச் சென்றது போல உள்ளது. தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை போல் இருக்கின்றது.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அவரவர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தி.மு.க, காங்கிரஸ் தலைமை கலந்து பேசி யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?