M K Stalin
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாலைவனமாகும் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கெனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!