M K Stalin
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாலைவனமாகும் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கெனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!