M K Stalin
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாலைவனமாகும் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கெனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!