M K Stalin
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாலைவனமாகும் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கெனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!