M K Stalin
உறுதியளித்தபடியே நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்... நன்றி தெரிவித்த கரூர் மக்கள்...
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைவரிடத்திலும் நன்றி தெரிவித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது, கரூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதும் மக்களின் கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
அதேப்போல், சொன்னதை செய்தும் காட்டிவிட்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பெண்களுக்கான தையல் பள்ளியை ஏற்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், வாக்குக்காக மட்டும் உறுதியளித்துவிட்டு அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு இடையே பிரசாரத்தின் போது அளித்த உறுதியை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலினை அப்பகுதி மக்கள் புகழ்ந்தனர்.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!