M K Stalin
உறுதியளித்தபடியே நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்... நன்றி தெரிவித்த கரூர் மக்கள்...
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைவரிடத்திலும் நன்றி தெரிவித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது, கரூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதும் மக்களின் கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
அதேப்போல், சொன்னதை செய்தும் காட்டிவிட்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பெண்களுக்கான தையல் பள்ளியை ஏற்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், வாக்குக்காக மட்டும் உறுதியளித்துவிட்டு அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு இடையே பிரசாரத்தின் போது அளித்த உறுதியை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலினை அப்பகுதி மக்கள் புகழ்ந்தனர்.
Also Read
-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் : பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக - குவியும் கண்டனம்!
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !