M K Stalin
“தோற்றாலும் மக்கள் மனதை வென்ற ராகுல் தலைவராக தொடரவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளைப் பெற்று தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுல் காந்தியிடம் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“தேர்தலில் தோற்றிருந்தாலும் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள்; காங்கிரஸ் தலைவராக தொடருங்கள்; தலைவர் பதவியை விட்டு விலக வேண்டாம்.” என ராகுல்காந்தியிடம் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்கத்தில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துத் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!