M K Stalin
“தோற்றாலும் மக்கள் மனதை வென்ற ராகுல் தலைவராக தொடரவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளைப் பெற்று தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுல் காந்தியிடம் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“தேர்தலில் தோற்றிருந்தாலும் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள்; காங்கிரஸ் தலைவராக தொடருங்கள்; தலைவர் பதவியை விட்டு விலக வேண்டாம்.” என ராகுல்காந்தியிடம் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்கத்தில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துத் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!