M K Stalin
“தோற்றாலும் மக்கள் மனதை வென்ற ராகுல் தலைவராக தொடரவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளைப் பெற்று தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுல் காந்தியிடம் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“தேர்தலில் தோற்றிருந்தாலும் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள்; காங்கிரஸ் தலைவராக தொடருங்கள்; தலைவர் பதவியை விட்டு விலக வேண்டாம்.” என ராகுல்காந்தியிடம் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்கத்தில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துத் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!