M K Stalin
சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மே 17ம் தேதி வரை வாக்கு சேகரிப்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அவர் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு வந்துள்ளார். மத்தியில் 3-வது அணி அமைவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!