M K Stalin
8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாத பா.ஜ.க - மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இன்று திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்து திருப்போரூர் பகுதியில் வேன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத திட்டங்களை மோடி அரசு கொண்டு வருகிறது. அதை அடிமை எடப்பாடி அரசு தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறது. அதற்காக நியாயமான வழிகளில் அதை எதிர்த்துப் போராடும் மக்களை கொலை செய்யக்கூட இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
8 வழிச்சாலை திட்டம் 5 மாவட்ட விவசாயத்தை அழிக்கும் திட்டம். அதை எதிர்த்துப் போராடி விவசாயிகள் நீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்கிறார்கள். ஆனால், நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 8 வழிச்சாலை திட்டத்தை பா.ஜ.க நிச்சயம் கொண்டு வரும் என்று பேசி உள்ளார். இதை மறுத்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் தைரியம் இருக்கிறதா?
திருப்போரூரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கிறது. தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்தால், விரைவில் இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.
Also Read
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news
-
”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது" : ரேபரேலியில் ராகுல் காந்தி அனல் பேச்சு!
-
விடியல் பயண திட்டம் - பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மோடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
”பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது இந்தியா வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!