India
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம், பத்ராட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷல். இவரது நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று, பார்தி ரயில்வே கேட் பகுதிக்கு சென்றனர்.
அப்போது, நண்பர்கள் தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். மேலும் ஹெட்போனை மாட்டிக் கொண்டு இருந்துள்ளனர்.
அந்நேரம் இந்த வழியாக, அகமதாபாத் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது. தண்டவாளத்தில் இளைஞர்கள் இருப்பதை பார்த்து, ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயன்றுள்ளார்.
இருப்பினும், இருவர் மீதும் ரயில் மோதியுள்ளது. இதில் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!