India
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !
கடந்த மே 13ஆம் தேதி அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை படிப்படியாக முன்னேறி முன்கூட்டியே இந்தியாவை எட்டியது. அதன் படி கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக இருந்தது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் கனமழையை கொடுத்ததோடு, பல இடங்களிலில் வெள்ளபெருக்குக்கும் காரணமாக அமைந்தது.
ஏற்கனவே இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை நிறைவு பெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 15 ஆம் தேதியோடு இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து நிறைவு பெறுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!