India
இனி ATM-ல் PF பணம் எடுக்கும் வசதி : ஒன்றிய அரசு திட்டம்!
வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது போல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஒன்றிய தொழிலாளர் நலத்துறை எடுத்து வருகிறது.
அதன்படி புதிய மாற்றத்தின் மூலம் பணத்தை எடுப்பதற்கு, வருங்கால வைப்புநிதி அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அதற்கு பதிலாக உறுப்பினர்கள் வைப்பு நிதியை வங்கிகளில் எடுப்பதுபோல தங்களின் யு.ஏ.என் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் எடுக்கலாம்.
இந்த வசதி அடுத்த மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, வைப்பு நிதியில் இருந்து உறுப்பினர் தனது பணத்தை எடுக்க நீண்ட நடைமுறை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், புதிய மாற்றத்தின் மூலம் பணம் எடுக்கும் வசதி எளிமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமானுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
-
தமிழ்நாடு முந்திரி வாரியம் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!
-
“திராவிட மாடல் ஆட்சியில் ‘மாணவர் மட்டும்’ சிறப்புப் பேருந்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
பள்ளி வழியை மறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் : அதிமுகவினர் அராஜகம்!
-
UPI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி : ரூ.10 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை!