India
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
பிரதமர் மோடியின் கல்வித்தகுதியில் பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. ஆனால் அவரது தரப்பில் முறையான எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் கல்வித்தகுதியை அறிய விண்ணப்பம் செய்யப்பட்டது.
எந்த கல்வி நிறுவனத்தில் பிரதமர் பட்டம் படித்தார், எப்போது அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது என்பது குறித்த கேள்விகளெல்லாம் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி ஒரு முதுகலை பட்டதாரி என்று பதிலளிக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் இளங்கலை பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், தனது கல்வித்தகுதி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாழ்க்கைக்கு வந்தபின்னர், பொது வெளியில் தனது கல்வித்தகுதியை சொல்வதில் பிரதமருக்கு என்ன தயக்கம், பிரச்சனை என்று அவர் வினவியுள்ளார்.
பட்டம் குறித்த தகவல் மற்றும் சான்றிதழ்களை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் அன ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தகவல் அறியும் சட்டம் மூலம் அனைத்தையும் அறிந்து விடுவார்கள் என்பதால்தான் அந்த சட்டத்தையே மோடி அரசு திருத்தியுள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!