India
மாட்டிறைச்சி உற்பத்தி : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம்!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களின் உணவு உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில்இந்துத்துவா கும்பல் மக்களின் உணவு உரிமைகளில் தலையிட்டு வருகிறது.
அதிலும், மாட்டிறைச்சியைச் சாப்பிடக்கூடாது என கூறி, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் இந்துத்துவா கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது.
பா.ஜ.க தலைவர்கள் கூட மாட்டிறைச்சி தடை செய்ய வேண்டும் என மறைமுகமாகவும், நேரடியாகவும் பேசி வருகிறார்கள். இது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2023 -24 ஆண்டில் இந்தியாவிலேயே ஒட்டுமொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் 745.65 (33%) மாட்டிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
கேரளா- 248.89 டன், மகாராஷ்டிரா - 229.74 டன், ஆந்திரப் பிரதேசம் - 188.13 டன், தெலுங்கானா - 158.29 டன், பீகார்-134.25 டன், பஞ்சாப் - 117.06 டன், தமிழ்நாடு - 60.02 டன் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் மட்டும் 33%க்கும் அதிகமாக உள்ளது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!