India

திடீர் மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல.. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுவது என்ன ?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள், நாட்டில் ஏற்படும் திடீர் மரண அறிக்கைகளுக்கும் COVID-19 தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துள்ளது.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, நாட்டில் பல நிறுவனங்கள் மூலம் விவரிக்கப்படாத திடீர் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் கோவிட்-19 தடுப்பூசிக்கும் நாட்டில் ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்த அறிக்கைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை உறுதியாக நிறுவியுள்ளன.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள், இந்தியாவில் COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் COVID-19 தடுப்பூசி காரணமாக கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்றும், திடீர் இதய இறப்புகள் மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நிலைமைகள் மற்றும் COVID-க்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “வலுவான போராட்டத்தால் இந்தித் திணிப்பை விரட்டி அடித்த மராட்டியம்” - முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!