India
தாஜ்மகால் குவிமாடத்தில் நீர் கசிவு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தொல்லியல் துறை... சரி செய்ய முடியுமா ?
முகலாய மன்னரான ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மகாலுக்கு தற்போது 372 வயதாகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மகாலை ஆண்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 80 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் மூலம் தாஜ்மகால் அமைந்துள்ள உத்தரபிரதேச அரசுக்கு மட்டும் 98 கோடி நேரடி ஆண்டு வருவாயாக கிடைக்கிறது. இப்படி மக்களை தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டிருக்கும் தாஜ்மகால் பிரதான குவிமாடத்தில் தற்போது நீர் கசிவு கண்டறியப்பட்டதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.
தொல்லியல் துறை ஆண்டு தோறும் நடத்தும் பராமரிப்பு சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒளியை பாய்ச்சி நடத்திய சோதனையின் போது 73 அடி உயர குவிமாடத்தின் கசிவு கண்டறியப்பட்டது. குவிமாட பளிங்கு கற்கள் இடையே உள்ள மோட்டார் பகுதியில் இந்த கசிவு தென்பட்டுள்ளது.
குவி மாடத்தை தாங்கி உள்ள இரும்பு லேசாக துருப்பிடித்த நிலையில் இருப்பதால் இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குவி மாட கதவும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். பணிகள் முடிவடைய 6 மாதங்கள் பிடிக்கும் என்று தாஜ்மகால் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!