India
தாஜ்மகால் குவிமாடத்தில் நீர் கசிவு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தொல்லியல் துறை... சரி செய்ய முடியுமா ?
முகலாய மன்னரான ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மகாலுக்கு தற்போது 372 வயதாகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மகாலை ஆண்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 80 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் மூலம் தாஜ்மகால் அமைந்துள்ள உத்தரபிரதேச அரசுக்கு மட்டும் 98 கோடி நேரடி ஆண்டு வருவாயாக கிடைக்கிறது. இப்படி மக்களை தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டிருக்கும் தாஜ்மகால் பிரதான குவிமாடத்தில் தற்போது நீர் கசிவு கண்டறியப்பட்டதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.
தொல்லியல் துறை ஆண்டு தோறும் நடத்தும் பராமரிப்பு சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒளியை பாய்ச்சி நடத்திய சோதனையின் போது 73 அடி உயர குவிமாடத்தின் கசிவு கண்டறியப்பட்டது. குவிமாட பளிங்கு கற்கள் இடையே உள்ள மோட்டார் பகுதியில் இந்த கசிவு தென்பட்டுள்ளது.
குவி மாடத்தை தாங்கி உள்ள இரும்பு லேசாக துருப்பிடித்த நிலையில் இருப்பதால் இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குவி மாட கதவும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். பணிகள் முடிவடைய 6 மாதங்கள் பிடிக்கும் என்று தாஜ்மகால் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!