India
கலப்படத்தால் மத்திய பிரதேச பா.ஜ.க CM-க்கு நேர்ந்த சோகம் : நடுவழியில் நின்ற கான்வாய்!
மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். இந்நிலையில் இவர் திறன் மேம்பாட்டு மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் முதலமைச்சர் செல்லும் கான்வாய் வாகனங்களுக்கு தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து செல்ல முயன்றபோது வாகனங்கள் பழுதாகியது.
பின்னர் வாகனங்களின் பழுதுக்கு காரணம் என்ன? என்று ஆய்வு செய்தபோது, 20 லிட்டர் டீசலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாற்று வாகனத்தில் முதலமைச்சர் தனது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பிறகு தண்ணீர் கலப்பட டீசல் வழங்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல்வைக்கப்பட்டது.
இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர், டீசலில் தண்ணீர் கலந்து இருப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக, டீசல் இருந்த தொட்டியில் மழைநீர் கசிந்து இருக்கலாம் என கூறியுள்ளார்.
Also Read
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!